chariman

விவசாயப் பொருளாதார வளர்ச்சியினை நோக்கி நாட்டினை செலுத்துதல், ஆரோக்கியமிக்க தேசம் ஒன்றிற்காக நஞ்சுமிக்க விவசாய இரசாயணங்களிலிருந்து விடுபடுதல் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அரசாங்கத்திற்கு உரித்தான நிறுவமொன்றாக வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி அதன் வியாபாரத்தின் ஊடாக அரசாங்க நோக்கத்திற்கு ஆதரவளித்தல் அதன் பொறுப்புடைமையாகும்.

வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியானது வெறுமனே இலாபம் உழைக்கும் நோக்குடன் இரசாயண உரங்களை மாத்திரம் விற்பனை செய்வது அன்றி சிறந்த தரத்திலான இரசாயண உரங்களின் அதிஉச்சமான பயன்பாட்டிற்காக விவசாயிகளுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றது. வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியாக நாம் எமது விவசாயிகளுக்கும் பயிர்ச்செய்கையாளர்களுக்கும் உயர் விளைச்சலுக்காக சேதன உரங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட இரசாயண உரங்களின் அதி உன்னத தரத்தினை பயன்படுத்துவதில் உரப் பிரயோகத்திற்கான சரியான முறைகள் பற்றியும் நாம் அறிவூட்ட விரும்புகின்றோம்.

ஒருங்கிணைக்கப்பட்ட பயிர் போசணை முறைமையானது ஆரோக்கியமிக்க தேசத்தினை நோக்கிய அரசாங்கத்தின் நோக்கிற்கு வினைத்திறன்மிக்கதும் செயல்திறன்மிக்கதுமாக அமைந்திருக்கும்.


டி.கே.ஜகத் குமர பெரேரா


தவிசாளர்
வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி

Latest News